அதிகாரி வீட்டில் 10 சவரன் மாயம்: போலீசில் புகார்

சென்னை: மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் வீட்டில் 10 சவரன் நகை மாயமானது தொடர்பாக இளம்பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர் அருண்டேல் தெருவை சேர்ந்தவர் ராகவன் (68). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது, அதில் 10 சவரன் நகைகள் மட்டும் மாயமாகி உள்ளது. வீட்டிற்கு எந்தவித அறிமுகமும் இல்லாத பெண் ஒருவர் வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு தான் நகை மாயமாகி உள்ளது. திருடர்கள் வந்து இருந்தால் அனைத்து நகைகளையும் எடுத்து சென்ற இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட நகைகள் மட்டும் மாயமாகியுள்ளது. எனவே, அந்த இளம்பெண் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது என புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் அருண்டேல் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா