மதுரை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பணம் எடுத்துவர தேவையில்லை என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடி பணபரிவர்த்தனை செய்யத் தேவையில்லை என மதுரையில் அமைச்சர் பேட்டியளித்தார். சார்பதிவாளர் அலுவலகங்களில் யாருக்கும், எதற்காகவும் கையூட்டு தரத் தேவையில்லை என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.