புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது. ஆளும் பிஜூ ஜனதாதளம் தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளம் தேர்தல் பொறுப்பை தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி கே பாண்டியனின் மனைவியும், ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் மே 31 முதல் 6 மாதம் வரை 10 ம் வகுப்பு படிக்கும் தனது மகளை பார்த்துக் கொள்ள குழந்தை பராமரிப்பு விடுப்பில் சென்றுள்ளார்.