ஒடிசாவில் படுதோல்வி எதிரொலி வி.கே. பாண்டியன் மனைவி 6 மாத விடுப்பில் சென்றார்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது. ஆளும் பிஜூ ஜனதாதளம் தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளம் தேர்தல் பொறுப்பை தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி கே பாண்டியனின் மனைவியும், ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் மே 31 முதல் 6 மாதம் வரை 10 ம் வகுப்பு படிக்கும் தனது மகளை பார்த்துக் கொள்ள குழந்தை பராமரிப்பு விடுப்பில் சென்றுள்ளார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை