இந்நிலையில், கப்பல் வாடகை கட்டணம், அபராத கட்டணம் உட்பட ரூ.7.95 கோடி செலுத்ததை எதிர்த்து பாரதீப் துறைமுகம் ஒடிசா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். கடல்சார் சட்டத்தின் கீழ் கப்பலை கைது செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இதனால் கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட முடியாது.