புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வி.கே.பாண்டியனை தரதரவென இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தினர். தற்போது ஒடிசா வளர்ச்சிக்கான அமைப்பின் தலைவராக உள்ள வி.கே.பாண்டியன் மீது சரமாரி தாக்குதல் நடத்தபட்டது. காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு நிலவியது.