மழைநீர் கால்வாய்க்கு அடியில் தேங்கிய மழைநீரில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சபடும் நிலையில், மீட்பு பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.