Monday, September 9, 2024
Home » 2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

by Suresh

கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, கொழும்புவில் இன்று நடைபெற உள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூரியகுமார் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.அடுத்து, ரோகித் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது. இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அரை சதம் விளாசி நல்ல தொடக்கத்தை தந்தார் ரோகித்.

அடுத்து வந்தவர்கள் பெரிதாகக் கை கொடுக்காவிட்டாலும், கே.எல்.ராகுல் – அக்சர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை நெருங்கினர். அவர்கள் ஆட்டமிழந்தபோது, இந்தியா 40.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு 47.3 ஓவரிலேயே 230 ரன் எடுத்து சமநிலையை எட்டினாலும், தேவையில்லாமல் அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டம் ‘டை’ ஆனது. இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

You may also like

Leave a Comment

12 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi