சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு: உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, வருகிற 4ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.