சென்னை: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கொடி ஏற்று விழா நேற்று நடந்தது. மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்புரையாற்றினார்.பின்னர், அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் டோல்கேட்களில் ஒருமுனை வரியாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், காலாவதியான டோல்கேட்டுகளை உடனே மூட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.