ஒரு 10 வீல் டிப்பர் லாரிக்கு மாதம் ரூ.70,000, ஒரு வருடத்திற்கு ரூ.8 லட்சம் செலுத்துகிறோம். 12 வீல் டிப்பர் லாரிக்கு மாதத்ம் ரூ.90,000, வருடத்திற்கு ரூ.10 லட்சம் செலுத்துகிறோம். இதனால் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பொருட்களை சென்னைக்கு எடுத்து வருபவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் தொழிலை பாதுகாக்க விரைவில் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து சிறிய, பெரிய வாகனத்திற்கு சாலை வரி உயர்த்தப்பட்டது.
அந்த வரியை குறைக்க வேண்டும். மணல் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் மணல் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு 3000 லோடு மணலும், தமிழகம் முழுவதும் 9000 லோடு மணலும் தேவைப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 75,000 மணல் லாரி உரிமையாளர், ஓட்டுநர் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 90 லட்சம் கட்டுமான தொழிலாளர் இருக்கிறார்கள். எனவே நவம்பர் மாதம் மழை காலம் முடிந்த பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.