Monday, July 8, 2024
Home » அந்தரங்க பகுதியை காட்டி திட்டித் தீர்த்த பெண்; பாஜக எம்பியை அலறவிட்ட ஆபாச ‘வீடியோ கால்’: மனைவியுடன் விடிய விடிய தூக்கமின்றி தவித்த பரிதாபம்

அந்தரங்க பகுதியை காட்டி திட்டித் தீர்த்த பெண்; பாஜக எம்பியை அலறவிட்ட ஆபாச ‘வீடியோ கால்’: மனைவியுடன் விடிய விடிய தூக்கமின்றி தவித்த பரிதாபம்

by Neethimaan

 

பெங்களூரு: கர்நாடகா பாஜக எம்பியின் செல்போனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், வீடியோ காலில் தனது அந்தரங்க பகுதியை காட்டி திட்டித் தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே பாஜக எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஜி.எம்.சித்தேஸ்வரா (71), யூபி சிட்டிக்கு அருகிலுள்ள கிங்பிஷர் டவர்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்தார். சம்பவம் நடந்த நாளின் இரவு, அவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பு வந்தது. எதிர்முனையில் வீடியோ காலில் பேசிய பெண், தனது அந்தரங்க உறுப்புகளை அவரிடம் காட்டி, அவரிடம் தகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த வீடியோ கால் அழைப்பைத் துண்டித்தார். இருந்தும் எதிர்முனையில் வீடியோ காலில் பேசிய பெண், பலமுறை அவருக்கு தொடர்ந்து வீடியோ காலில் அழைப்பு விடுத்தார்.

வேறுவழியின்றி அவர் தனது மனைவியிடம் தனது போனை கொடுத்த பிறகுதான், அவருக்கு போன் செய்வதை மர்மப் பெண் நிறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் அளிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில், மீண்டும் மற்றொரு வாட்ஸ்அப் கால் வந்தது. எதிர்முனையில் பேசிய பெண், ‘நீங்கள் அந்தரங்க வீடியோவை பார்த்ததை பதிவு செய்துள்ளோம். அதனை இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம்’ என்று மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர், விடியவிடிய மனைவியுடன் தூக்கமின்றி தவித்தார். அடுத்த நாள் மேற்கண்ட சம்பவம் குறித்து கமர்ஷியல் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘கடந்த 20ம் தேதி இரவு 10.16 மணியளவில், புதிய நம்பரில் இருந்து எனக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அதில் ஹலோ எப்படி இருக்கிறாய்? என்று கேட்கப்பட்டது. நான் அதற்கு பதிலளிக்கவில்லை. மீண்டும் அன்றிரவு 10.22 மணியளவில் வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பு வந்தது. எதிர்முனையில் வீடியோ காலில் பேசியது பெண் என்பது தெரிந்தது. அவர் இந்தியில் பேசினார். நான் அந்த பெண்ணிடம், ‘நீங்கள் யார்? எதற்காக எனது நம்பரில் தொடர்பு கொண்டீர்?’ என்று கேட்டேன். அப்போது அந்த பெண், தனது அந்தரங்க பகுதியை காட்டி தகாத முறையில் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த நான், அவரது வீடியோ கால் அழைப்பை துண்டித்துவிட்டேன்.

இரவு 10.24 மணியளவில் மீண்டும் வாட்ஸ்அப் ஆடியோ அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ஆபாசமாக என்னை திட்டினார். அதனால் அந்த அழைப்பையும் துண்டித்தேன். இரவு 10.27 மணியளவில் மீண்டும் அந்த பெண் வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டார். மீண்டும் தனது முகம் மற்றும் அந்தரங்க பாகங்களைக் காட்டி ஆபாச செய்கைகளை செய்தார். அப்போது வீட்டில் நான் காபி அருந்திக் கொண்டிருந்தேன். என்ன செய்வதென்றே எனக்கு அப்போது தெரியவில்லை. தொடர்ந்து வரும் வீடியோ கால் குறித்து என் மனைவியிடம் கூறினேன். எனது மனைவியிடம் செல்போனை கொடுத்துவிட்டேன். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை திட்டினோம். அப்போது அந்தப் பெண் வாட்ஸ்அப் வீடியோ காலை துண்டித்துவிட்டார்.

இரவு 10.47 மணியளவில், நான் அவர்களிடம் பேசிய வீடியோ கால் பதிவுகளை எனக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் என்னை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினர். நான் பார்த்த ஆபாச வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக மிரட்டினர். உடனடியாக தாவணகெரே போலீஸ் எஸ்பி அருணுக்கு போன் செய்து, தனக்கு நேர்ந்த ஆபாச வீடியோ கால் விவகாரம் குறித்து விளக்கினேன். மேலும் அந்த பெண் தொடர்பான கும்பல் அனுப்பிய பதிவுகள், குறுஞ்செய்திகளை அவருக்கு பார்வேர்ட் செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாஜக எம்பி ஜி.எம்.சித்தேஸ்வராவின் போனுக்கு, ராஜஸ்தானில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் வந்துள்ளது. எதிர்முனையில் வீடியோ காலில் பேசிய பெண் மீது, பாலியல் வன்முறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

ஒன்றிய அமைச்சருக்கும் ஆபாச வீடியோ கால்
ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலின் தனி செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், ‘ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் படேலின் ெசல்போன் எண்ணுக்கு மர்ம நபரிடம் இருந்து வீடியோ கால் அழைப்பு வந்தது. அவர் அந்த வீடியோ கால் அழைப்பை எடுத்தவுடன் மறுபக்கத்தில் இருந்து ஆபாச வீடியோ ஓட ஆரம்பித்தது. உடனடியாக அமைச்சர் அந்த வீடியோ கால் அழைப்பை துண்டித்துவிட்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகாரை பெற்ற டெல்லி போலீசார், அதனை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றினர். அவர்கள் வழக்கு பதிவு செய்து, அமைச்சருக்கு வீடியோ காலில் ஆபாச பதிவை வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த முகமது வக்கீல், முகமது சாஹிப் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான சபீரை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twenty − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi