மெட்ரோ ரயிலில் ஆபாச நடத்தை; மிகவும் முட்டாள்தனமான செயல்: பிரபல சினிமா இயக்குனர் காட்டம்

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் பயணிகள் ஆபாச செயலில் ஈடுப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பிரபல சினிமா இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி காட்டமான பதிவை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்த இளம் பயணிகளில் சிலர், ஆட்சேபனைக்குரிய நடத்தையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் ஆபாச நடவடிக்கை தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின. இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) வெளியிட்ட உத்தரவில், ‘சில பயணிகளின் ஆபாச நடத்தையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வசதியாக, மெட்ரோ ரயில் பெட்டிகளில் சீருடை மற்றும் சிவில் உடையில் போலீசார் நிறுத்தப்படுவார்கள்’ என்று கூறியுள்ளது.

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி வௌியிட்டுள்ள பதிவில், ‘இது மிகவும் முட்டாள்தனமானது’ என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் மெட்ரோ ரயில் போலீசார் நிறுத்தப்பட்டிருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், ரயிலில் ஆட்சேபனைக்குரிய நடத்தை எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நிலையில், தற்போது எதற்காக இந்த நடவடிக்கை என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து மெட்ரோ முதன்மை செயல் இயக்குநர் அனுஜ் தயாள் கூறுகையில், ‘பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம், பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும்’ என்றார்.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு