சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி, ‘‘பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் தொடங்கும். சசிகலாவை உரிய நேரத்தில் சந்தித்து பேசுவோம்’’ என்றார்.