நெல்லை: பனங்காட்டு படை கட்சி தலைவரான ராக்கெட் ராஜா 2 கொலை மற்றும் பஸ்சை எரித்து ஒரு வழக்கு என 3 வழக்குகளில் நெல்லை நீதிமன்றம் ஆஜராக உத்தரவை அடுத்து நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதையொட்டில் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி நம்பர் பிளேட் இல்லாத காரில் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் புடைசூழ ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.