சென்னை: நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தக்கல் செய்த மனு மீது ஜூன் 20-ல் விரிவான உத்தரவு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.