சென்னை: தனியார் வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகன நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்களை ஒட்ட தடை விதித்து உத்தரவிடப்பட்டது. உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் எடுத்த நடவடிக்கையை அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.