சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதால் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளது.