திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் அமைந்துள்ள வெங்கலப்பாளையம் பகுதியில் இருந்து ஊத்துக்குளி பகுதிக்கு செல்ல சாலை மார்க்கமாக செல்ல 10 கிலோமீட்டர் தொலைவு ஆகிறது. அதுவே நொய்யல் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு 2 கிலோமீட்டராக குறைகிறது. இதனால் வெங்கலப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் இருகரைகளிலும் கம்பம் நட்டு ஆற்றின் குறுக்கே கம்பி கட்டி அதனை பிடித்தபடி பரிசலில் செல்ல கிராம மக்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.
கத்தாங்கன்னி, வயக்காட்டுபுதூர், கணபதி பாளையம், வெங்கலப்பாளையம் என 5 கிராம மக்கள் இந்த பரிசலை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். நொய்யலில் அதிக அளவில் வெள்ளம் வரும் காலங்களில் இந்த பரிசல் பயணத்தையும் பயன்படுத்த முடியாது என்பதால் தங்களுக்கு இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.