கடலூர்: தூய்மை பணியாளர்களின் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.