அதேபோல, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகளை உடனடியாக செயலாக்கத்திற்கு கொண்டு வந்து திட்டங்களை நிறைவேற்றிடுமாறு அதிகாரிகளிடையே அறிவுறுத்தப்பட்டது.
இந்தகூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.