சட்டப்பேரவையில் அமித்ஷா பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட், ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமுக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இன்று பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை. திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது.

தவறாக இருந்தால் நீக்க தயாராக இருக்கிறோம். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அவர் பெயர் இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன்” என்றார். பின்னர் மீண்டும் பேசிய முதலமைச்சர், “அவர் பெயர் தகாத வார்த்தையா? சொல்லுங்கள்.

ஒன்றிய அமைச்சரின் பெயர் தகாத வார்த்தையா? எதற்காக அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர் தகாதா வார்த்தையா? ஏன் அவைக்குறிப்பில் நீக்க வேண்டும்? இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா