கட்சிக்காக உழைக்காமல் உள்ளனர். திமுக சார்பில் போராட்டம், பொதுக்கூட்டம் என்று அழைத்தால் தான் 5 பேரை அழைத்து வருவருவதாக கூறிவிட்டு, அவர்கள் மட்டும் தனியாக வருகின்றனர். இது சரியல்ல. கட்சி தலைமை மக்களுடனும், தொண்டர்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நீங்கள் கட்சிக்காக உழைத்தால் கேட்காமலேயே உங்களுக்கு கட்சியில் மட்டுமின்றி மக்கள் பிரிதிநிதி பதவிகளும் உங்களை தேடி வரும். ஏழை மக்கள், பெண்கள், மாணவிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும், ஜாதி மத வேறுபாடின்றி நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்து கொண்டுள்ளார். அவரது வழியில் உதயநிதி ஸ்டாலினும் 24 மணி நேரமும் மக்கள் பணியாற்றி வருகிறார். செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரை துணை முதல்வராக நியமிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தொமுச சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநகர இளைஞரணியை சேர்ந்த சிடி சுரேஷ், மணிகண்டன், சேக் மீரான், ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.