இந்நிலையில் தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில்,வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலி பெருக்கி பிரசாரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லையில் வடகொரியாவை நோக்கி ராட்சத ஒலி பெருக்கிகளை வைத்து அதில் அந்த நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்ய தென் கொரியா திட்டமிட்டுள்ளது. இது போன்ற செயல்களுக்கு எதிராக வட கொரியா நேரடி ராணுவ தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இதனால் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தென் கொரிய ராணுவ கமாண்டர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.