பூந்தமல்லியில் போதைப்பொருள் விற்ற வட மாநில தொழிலாளி கைது

பூந்தமல்லி: சென்னை வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனுருல்லாஹ் (33), முஜிபுர் ரஹ்மான் (44) ஆகிய இரு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களிடம் குட்கா போன்ற போதைப் பொருள் இருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த இவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரூ.30,000 மதிப்புள்ள மெஸ்கலைன் என்ற போதைப் பவுடர் அனுருல்லாஹிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போலீசார் அவரிடமிருந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்தப் போதைப் பொருளை எரிப்பதால் வரும் புகையை சுவாசிப்பதாலும், இந்த பவுடரை திரவமாக்கி ஊசி மூலம் செலுத்துவதாலும் போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அனுருல்லாஹ் வட மாநிலங்களில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனுருல்லாஹை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

புதுச்சேரி-கடலூர் சாலையில் தடுப்பு கட்டையில் மோதி சென்னை பஸ் கவிழ்ந்தது: டிரைவர் பலி; 49 பேர் படுகாயம்

ரூ.800 கோடி எங்க இருக்குனு தெரியாது; மூட்டை தூக்கி பிழைப்பேன்: சொல்கிறார் சரத்குமார்

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்