டெல்லி: வடமாநிலங்களில் கொட்டி வரும் கடும் பனிபொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே காஸ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடும் பனி கொட்டிவருகிறது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் குளிர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மிக அருகில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பகல் மட்டுமன்றி இரவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுவதால் சிறு சிறு வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றனர். உத்திர பிரதேசம், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கடும் பனி நிலவி வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இயல்பை விட அதிகளவில் பனிமூட்டமும், குளிரும் வாட்டுவதாகவும் குறிப்பிடுகிறது.
இந்நிலையில் டெல்லிக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இடையே செல்லும் 14 ரயில்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது. டெல்லியில் சாலையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்யி மட்டுமின்றி பஞ்சாப். ஹரியானாவில் மிட அடர்ந்த மூடுபனிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.