தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைத்திடும் பொருட்டு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஜெனரேட்டர் வசதி, மின்கம்பங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான மரக்காணம் பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஏரிக்கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.