Tuesday, October 22, 2024
Home » வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை

by Neethimaan

சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில், மழைக்காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 01.07.2024 முதல் 14.10.2024 வரை 45,956 மரங்களின் கிளைகளும், 15.10.2024 முதல் 19.10.2024 வரை 2,708 மரங்களின் கிளைகளும் என மொத்தம் 48,664 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக 262 மர அறுவை இயந்திரங்கள், 216 டெலோஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள், வட்டாரத்திற்கு தலா 3 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் என 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் மற்றும் 2 ஹைட்ராலிக் ஏணிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் விவரம்:

You may also like

Leave a Comment

15 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi