சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதார இணை இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால நோய்கள், தொற்று, தொற்றா நோய் கண்டறிதல், கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.