இந்நிலையில் ஆரணி பொதுப்பணித்துறை உட்கோட்டத்தில் உள்ள 172 ஏரிகளில் அய்யம்பாளையம், குன்னத்தூர், மலையாம்பட்டு, ராட்டினமங்கலம், அக்காரபாளையம் உள்பட 33 ஏரிகள் நிரம்பியதாக ஆரணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்மழை பெய்தால் மேலும் 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்த 33 ஏரிகள் நிரம்பியுள்ளதால் 5,000க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.