வடசென்னை பகுதிகளில் கத்தியுடன் மக்களுக்கு மிரட்டல்; சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சிலர் குடி போதையில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவல்படி, பேசின்பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது அங்கிருந்த கும்பல் தப்பியோடியது. அப்போது ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) என்பது தெரிந்தது.

இவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்தனர். புளியந்தோப்பு நெடுஞ்சாலை பெரியார் நகர் சந்திப்பு அருகே சுற்றித்திரிந்த 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. புளியந்தோப்பு காந்திநகர் சந்திப்பு அருகே மதுபோதையில் தகராறு செய்த புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்து இவர்களிடம் இருந்தும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்