ஸ்ரீபெரும்புதூர் அருகே மேற்கூரையில் இருந்து விழுந்த வடமாநில தொழிலாளி பலி: போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணியில் ஈடுபடிருந்தபோது, மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
மேற்கு வங்க மாநிலம், பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமினி முடி (53). இவர், சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி மேற்கூரை மீது ஏறி வேலை செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அங்கிருந்தவர்கள் அமினி முடியை மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது குறித்த சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி