வடமாநில கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்

ஆவடி: வட மாநில கட்டிட தொழிலாளி காலை உணவு சாப்பிடும் முன் மயங்கி விழுந்து திடீர் மரணம் அடைந்தார். ஆவடியில், சுரக்காபாளையம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்தவர் பரமானந்த ஹரிஜான் (55). கொத்தனார். இவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர், ஆவடி மார்க்கெட் பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவர், தங்கி உள்ள அறையில் 12 வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வீட்டில், காலை உணவு அருந்த தட்டை எடுக்கச்சென்றபோது, பரமானந்த ஹரிஜான், கீழேவிழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்தார். உடனே, அருகே இருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவரை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, பரிசோதித்த மருத்துவர்கள் கூறினார். தகவலறிந்த ஆவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் அறையில் தங்கியுள்ள வடமாநில 11 தொழிலாளர்களிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது