அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்ததாக அண்டை நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடனான மோதல் வலுத்து வரும் நிலையில் தனது ஆயுத பலத்தை வடகொரியா விரிவுபடுத்துவதாக கூறப்படுகின்றது. அதிபர் கிம் ஜாங் உன், அணுசக்தியை வலுப்படுத்துவது மற்றும் வழக்கமான ஆயுதங்கள் துறையில் மிகப்பெரிய தாக்குதல் திறனை பெறுவது அவசியமாகும் என்று ராணுவத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் ராணுவ பலம் இருந்தால் மட்டுமே எதிரிகளின் படையெடுப்பை முறியடிக்க முடியும் என்றும் கிம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.