வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில், நீர் மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார். ஒடிஸா மாநிலம் கோராபுத் மாவட்டம் நிலதோராபுத் தாலுக்கா ஹக்கிம்பத் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராம் கன்வார். இவரது மகன் நரசின்கா கன்வார்(27). கூலி தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு செல்லிப்பட்டி பகுதியில் மின்சார வாரியத்தின் மூலம் நடைபெறும் நீர்மின் திட்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று மதியம் மலை மீது பணியில் ஈடுபட்டிருந்தபோது தடுமாறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து