மும்பை: புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டில் ரூ. 10,000 கோடி அளவுக்கு மட்டுமே இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார். டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ்வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறுகையில், ‘‘ புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ. 2,000 நோட்டில் இன்னும் ரூ. 10,000 கோடி மதிப்பிலான நோட்டு மட்டுமே திரும்ப வரவேண்டியுள்ளது’’ என்றார். சில நாட்கள் முன்பு, 87 சதவீத ரூ. 2,000 நோட்டு திரும்ப வந்ததாக சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார்.