மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கலைவாணி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், வருமானவரித்துறை, பத்திரபதிவுத்துறை, வங்கிகள் ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆவணங்களை கேட்டு பெற்றுவந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23ம் தேதி மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. ஆகியோர் வருகிற 7ம் தேதி பதில் அளிக்குமாறு கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 6ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு இன்னும் பட்டியலுக்கு வரவில்லை. அந்த மனு விசாரணைக்கு வந்தால், வழக்கு விசாரணை சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது.