திருவள்ளூர்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பரிந்துரையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலோடு, அகில இந்திய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அஸ்வின், வெங்கடேசன், ரமேஷ், திவாகர் சுயம் பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் தளபதி மூர்த்தி, பூண்டி பழனி, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் மாநகர போக்குவரத்து கழக உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ரமேஷ், சரஸ்வதி, முகுந்தன், பிரகாஷ், பொன்ராஜ், அருள், செந்தில்குமார், சத்யா, தாஸ், ஸ்டாலின், இருதயராஜ், பாஸ்கர், ரகுராமன், சதீஷ், ராமன், இளங்கோவன், பாலுசாமி, குப்பன், அன்பு, வில்சன், மனோகரன், கோட்டி, பார்த்தசாரதி, ராஜராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை அடைய வேண்டும் எனவும் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகரர் எம்எல்ஏ தெரிவித்தார்.