இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறைக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அஸ்திவாரம் போடும் பணிக்கு மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சி.எம்.டி.ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஸ்குமார், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி தரப்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்தநீதிபதிகள், எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து, விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.