போராட்டம் நடந்த இடத்தில் இருந்த கூடாரங்களை காவல்துறை அகற்றியது. இந்நிலையில் டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மல்யுத்த வீரர்கள் வருங்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரினால், ஜந்தர் மந்தர் அல்லாத பொருத்தமான இடத்தில் அனுமதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.