சென்னை: என்.எல்.சி.யில் சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த ஒன்றிய , மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். என்.எல்.சி.யால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது ஆய்வில் உறுதியானால் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.