நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி

பாட்னா: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபித்தார். 129 சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிஷ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆர்.ஜே.டி., காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைத்த நிதிஷ், அண்மையில் திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறினார். மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்த நிதிஷ்குமார், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை