நிர்மலாதேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

மதுரை: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் தரக் கோரி நிர்மலாதேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இடைக்கால ஜாமின் தர மறுப்பு தெரிவித்த நீதிபதி ராமகிருஷ்ணன், விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Related posts

மது அருந்த பணம் தராததால் தலையில் கல்லை போட்டு மாமியாரை கொன்ற மருமகன்

பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார்

10ம் ஆண்டில் சென்னை மெட்ரோ: இதுவரை 29.87 கோடி பேர் பயணம்