நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது.!

பந்தலூர்: புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட ஒரு தனியார் தேயிலை தோட்டத்திற்குள் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று, இறந்த புலிகளை பார்வையிட்டனர்.அப்போது அந்தப்பகுதியில் சோதனை செய்த போது புலிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றி இறந்து கிடந்தது. மேலும் அங்கு புலிகளின் கால் தடங்கள் பதிவாகி இருந்தன. அப்போது காட்டுப்பன்றி விஷம் தின்று இறந்ததும், அதனை தின்று புலிகள் இறந்ததும் தெரியவந்தது.

புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.புலிகள் இறந்து கிடந்தது தொடர்பாக அந்தப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், காட்டுப்பன்றியை கொல்ல வனப்பகுதியில் விஷம் வைத்தது மேற்கு வங்கத்தை சேர்ந்த சூரியநாத் பராக் (வயது 35), அமன் கொயாலா (27), சுபித்நின்வார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது