நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குட்டியானை விழுந்தது. ஜேசிபி உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிணற்றைச் சுற்றி நின்ற யானைகளை விரட்டிவிட்டு குட்டி யானையை மீட்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.