நீலகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் சுந்தர வடிவேல். இவரது அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றுபவர் தமிழ்குடிமகன்(32). நேற்று காவல் கண்காணிபாளரின் மனைவியை கோவை விமான நிலையத்திற்கு கூட்டி சென்று விடுவதற்காக ஊட்டியில் இருந்து தமிழ்குடிமகன் புறப்பட்டார்.
நேற்று மாலை மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டல் ஊழியர் அல்டாப், பின்னால் அமர்ந்து வந்த கல்லூரி மாணவர் முகமது ஜுனைத் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாலளையம் காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த அவர்களை மேட்டுபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கோவை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஓட்டல் ஊழியர் அல்டாப் உயிரிழந்தார். இதனை அடுத்து கோவையில் சிகிச்சை பெற்றுவந்த முகமது ஜுனைத் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து மேட்டுபாலையம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.