Monday, September 9, 2024
Home » நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: உதவி எண் அறிவிப்பு

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: உதவி எண் அறிவிப்பு

by Lavanya

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதை அடுத்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1077, காவல்துறை கட்டுப்பாட்டு அறை 0423 2444111-ல் தொடர்பு கொள்ளலாம். தனிப்பிரிவு அலுவலகம் -9498101260 9789800100 ஆகிய எண்களையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பயிற்சி பெற்ற 10 பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர் என எஸ்.பி. சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மழையால் ஆங்காங்கே சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன; இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

eight + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi