நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின் திட்டமிடுதல் கூட்டம்

ஊட்டி : நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடர்பான திட்டமிடுதல் கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடி மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.ஆனால் நலத்திட்ட உதவிகள் அவர்களை சரிவர சென்றடைவதில்லை.

மேலும் அரசு பல திட்டங்களை வகுத்திருந்தாலும் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து திட்டங்கள் வகுப்பது கிடையாது.இதனால் 2014ம் ஆண்டு முதல் பழங்குடி மக்கள், தங்களுக்கு என்ன தேவை என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர்.இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியின மக்களுக்கு எந்த மாதிரியான திட்டங்கள் தேவை என்பது குறித்து விவாதித்து அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு திட்டமிடுதல் கூட்டம் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான திட்டமிடுதல் கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி பண்டைய பழையினர் கூட்டமைப்பு மற்றும் சமூக கண்காணிப்பகம் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் முன்னாள் அரசு செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் பழங்குடி மக்களுக்கு தற்பொழுது என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் வளர அவர்களுக்கு என்ன தேவை என்பதை, வாழ்வாதாரத்தை பெருக்கும் திட்டங்கள் எவை என்பது குறித்து முடிவு செய்து அறிக்கையாக தயார் செய்து அரசு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகமும் கலெக்டர் தலைமையில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தி பழங்குடி மக்களுக்கு என்னென்ன மாதிரியான திட்டங்கள் தேவை என்பது குறித்து கேட்டறிந்து அதன் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆன்றோர் மன்ற குழு உறுப்பினர் மல்லிகா, நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின் தலைவர் நோர்தே குட்டன்,செயலாளர் நிஜி சரஸ்வதி, மற்றும் சமூக கண்காணிப்பகம் இயக்குனர் இருதயராஜ் மற்றும் 6வகை பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

குட்கா வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழக மீனவர்கள் 5 பேர் கைது.. இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி