நிலக்கோட்டை, ஏப். 19: நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் 25ம் ஆண்டு விழா நடந்தது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் லதா பூரணம் தலைமை வகித்து பேசுகையில், அச்சம், மடம், நாணம் மட்டுமே பெண்களின் அடையாளமாக இருந்தது. தற்போது ஞானம், நல்லறம், வீரம் ஆகியவை பெண்களின் அடையாளமாக மாறியுள்ளது. பறவைகளுக்கு இறகு போல பெண்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறக்கலாம்’ என்றார். தொடர்ந்து துறை ரீதியாக ஒவ்வொரு பிரிவிலும் நடந்த விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பேரவை தலைவியும், 3ம் ஆண்டு மாணவியுமா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.