கத்தாருக்கு போதைப்பொருள் கடத்திய நைஜீரிய ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: மேடவாக்கம் அஞ்சலகத்தில் இருந்து பார்சல் மூலமாக வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் சென்னை மண்டல போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனையிட்டபோது, கத்தார் தலைநகர் தோகாவிற்கு பார்சல் மூலம் அனுப்ப இருந்த 194 கிராம் மெத்தாபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேடவாக்கத்தில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த கிளென் தாமஸ் (38) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு, போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.செல்லதுரை ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதைப் பொருள் கடத்தியதாக கிளென் தாமசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Related posts

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா