புழல் சிறையில் ஒரே காதலருக்காக பெண்ணின் உதட்டை கடித்த நைஜீரிய பெண்: போலீஸ் விசாரணை

புழல்: புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பெண்கள், தங்களின் ஒரே காதலருக்காக நேற்றிரவு வாய்த்தகராறில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த கைகலப்பில் ஒரு பெண்ணின் உதட்டை மற்றொருவர் சரமாரி கடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா (31), கிளாரக்கா (32) ஆகிய 2 பெண்களும் போதைபொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் ஒரு நைஜீரிய வாலிபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள நைஜீரியாவை சேர்ந்த ஆண் கைதியை மோனிகா, கிளாரக்கோ ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை பார்வையாளர் சந்திப்பு நேரத்தின்போது, சிறைத்துறை அனுமதியுடன் விசாரணை பிரிவில் உள்ள நைஜீரிய ஆண் காதலருடன் கிளாரக்கோ பேசியுள்ளார். பின்னர் அறைக்கு திரும்பியதும், எனது காதலருடன் நீ எப்படி பேசலாம் என்று கிளாரக்கோவிடம் மோனிகா வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமான மோனிகா, கிளாரக்கோவின் உதட்டை சரமாரி கடித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் சிறைக் காவலர்கள் விரைந்து வந்தனர்.

அங்கு கிளாரக்கோவை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உதட்டில் தையல்கள் போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதட்டை கடித்த நைஜீரிய பெண் மோனிகாவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்

ஈரானின் கிழக்கு பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழப்பு

ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்